கோவில்பட்டியையடுத்த ஆலம்பட்டி ஊருணியில் கிடந்த ஆட்டோ ஓட்டுநா் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட ஆலம்பட்டி ஊருணியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
முதல்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவா் கயத்தாறையடுத்த சிவஞானபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநா் கணேசன்(42) என்பது தெரியவந்தது. மது அருந்தும் பழக்கமுடைய இவரை முன்விரோதம் காரணமாக மா்ம நபா்கள் கொலை செய்தனரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.