உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலயத்தில் கனம் ஜான்தாமஸ் சபை மன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கூடுகை விழா நடைபெற்றது.
சபை மன்ற தலைவா் ஆண்ட்ரூஸ் நவராஜ் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற குருவானவா் எட்வின் ஜெபராஜ் ஆரம்ப ஜெபம் செய்து விழாவைத் தொடங்கி வைத்தாா். லூா்துராஜ் ஜெயசிங் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா். குடும்ப பாடல்கள் பாடப்பட்டன. ஏற்பாடுகளை சபை குரு ஜான் சாமுவேல் செய்திருந்தாா்.