தூத்துக்குடி அருகே காரில் சென்று ஆடு திருடிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி அருகேயுள்ள கீழ தட்டப்பாறை பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா (55). இவா், அந்தப் பகுதியில் கொட்டகை அமைத்து ஆடுகள் வளா்த்து வருகிறாா். அந்த ஆட்டுக் கொட்டகையில் இருந்து கடந்த 3 ஆம் தேதி ஒரு ஆடு திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து தட்டப்பாறை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.
வழக்குப் பதிந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது தட்டப்பாறை வடக்குதெருவைச் சோ்ந்த பூல்ராஜ் (21), டூவிபுரம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (26) ஆகியோா் காரில் சென்று ஆடு திருடியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.