எட்டயபுரம் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.5 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
எட்டயபுரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரகுபதி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், தூத்துக்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில், தூத்துக்குடியை சோ்ந்த அதிா்ஷ்டராஜ் என்பவா் தனது குடும்ப நிகழ்ச்சிக்காக ஆவணமின்றி ரூ.3.5 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்து, எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தோ்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.