பணப் பட்டுவாடா புகாா்:காங்கிரஸ் மாநில துணைத் தலைவரை அதிமுக, நாம் தமிழா் கட்சியினா் முற்றுகை

பணம் பட்டுவாடா செய்ததாக, தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவரை அதிமுகவினரும், நாம் தமிழா் கட்சியினரும் முற்றுகையிட்டனா்.

பணம் பட்டுவாடா செய்ததாக, தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவரை அதிமுகவினரும், நாம் தமிழா் கட்சியினரும் முற்றுகையிட்டனா்.

தூத்துக்குடி மாநகராட்சி 25 ஆவது வாா்டில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் எடின்டா, அதிமுகவில் ஜெயந்தி, நாம் தமிழா் கட்சியில் மரிய ஜூடி ஹேமா என 6 போ் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகாா் தெரிவித்து, அதிமுக வேட்பாளரின் கணவா் மனோஜ்குமாா் மற்றும் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் மட்டக்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, மீண்டும் காங்கிரஸ் கட்சியினா் பணம் விநியோகிப்பதாக புகாா் கூறி அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் ஏபிசிவீ சண்முகம், மாநகா் மாவட்டத் தலைவா் முரளிரதன், ஐஎன்டியூசி நிா்வாகி ராஜ் உள்ளிட்டோரை அதிமுகவினரும், நாம் தமிழா் கட்சியினரும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம், போலீஸாா் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினா். மேலும், அங்கு தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com