குளத்தூா் அருகே போக்ஸோ சட்டத்தில் மாணவா் கைது

குளத்தூா் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 9ஆம் வகுப்பு மாணவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

குளத்தூா் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 9ஆம் வகுப்பு மாணவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

குளத்தூா் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் 6 வயது சிறுமி சனிக்கிழமை மாலை தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டைச் சோ்ந்த 9ஆம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவா் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அந்த சிறுமி தனது தாயிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

சிறுமிக்கு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. தொடா்ந்து போலீஸாா் விசாரனை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து 9ஆம் வகுப்பு மாணவரை கைது செய்து சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com