தூத்துக்குடி ஆட்சியா் பெயரில் பணம் கேட்டு தகவல் அனுப்பும் நபா் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பெயா் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அறிதிறன்பேசி எண் (6378370419) மூலம் முக்கிய நபா்களை தொடா்பு கொண்டு பணம் கேட்பதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜிடமும் அவரது நண்பா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஏமாற்றுக்காா்கள் பணம் கேட்டு எனது (ஆட்சியா் கி. செந்தில்ராஜ்) சுயவிவரப்படத்தை வைத்து போலி தகவல்களை பரப்பி வருகின்றனா். அதை யாரும் நம்ப வேண்டாம். இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.