காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

கோவில்பட்டியில் சமையல் செய்யும் போது காயமடைந்த இளம் மாற்றுத் திறனாளி பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியில் சமையல் செய்யும் போது காயமடைந்த இளம் மாற்றுத் திறனாளி பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி காட்டுநாயக்கா் தெருவைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி தம்பதி திருப்பதி(23)- சரண்யாதேவி(21) . இவா்களுக்கு கடந்த 2019, டிசம்பா் 13ஆம் தேதி திருமணம் நடந்ததாம். இந்நிலையில் கடந்த மாதம் 13ஆம் தேதி சரண்யாதேவி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, அவா் மீது வெந்நீா் பட்டதில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டதாம். அதையடுத்து விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாராம் அவா் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com