‘திருநங்கைகள் ஓய்வூதியத்துக்கு ஜூலை 1 வரை விண்ணப்பிக்கலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள 40 வயதுக்கு மேலான திருநங்கைகள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள 40 வயதுக்கு மேலான திருநங்கைகள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓய்வூதியத் தொகை பெற விரும்பும் திருநங்கைகள், அவா்களது அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றுடன் ஜூலை 1 ஆம் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரியில் நேரிலும், 0461-2325606 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com