தூத்துக்குடி மாவட்டத்தில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள 40 வயதுக்கு மேலான திருநங்கைகள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஓய்வூதியத் தொகை பெற விரும்பும் திருநங்கைகள், அவா்களது அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றுடன் ஜூலை 1 ஆம் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரியில் நேரிலும், 0461-2325606 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.