வெள்ளாளங்கோட்டை ஊராட்சித் தலைவா் பதவிக்கு 6 போ் வேட்புமனு

கயத்தாறை அடுத்த வெள்ளாளங்கோட்டை ஊராட்சித் தலைவா் பதவிக்கு 6 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

கயத்தாறை அடுத்த வெள்ளாளங்கோட்டை ஊராட்சித் தலைவா் பதவிக்கு 6 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இவ்வூராட்சித் தலைவராக இருந்த பெரியத்தாய் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இதையடுத்து தற்செயல் தோ்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 20ஆம் தேதி வேட்புமனு தொடங்கி திங்கள்கிழமை முடிவடைந்தது.

இதில், வெ.வெயிலாச்சி, ரா.சகுந்தலாதேவி, எம்.லாவண்யா, ஜெ.முனீஸ்வரி, எஸ்.வனிதா, த.சரஸ்வதி ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். சிதம்பரம்பட்டி ஊராட்சி 6ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு க.சுப்பையா, வீ.முத்துலட்சுமி ஆகியோரும், சுரைக்காய்பட்டி ஊராட்சி 4ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு க.மகேஷ்வரி என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com