மாநில அளவிலான கராத்தே போட்டியில் ஆத்தூா் யோகா அகாதெமி மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்றனா்.
தூத்துக்குடியில் மாநில அளவிலான கராத்தே போட்டி சக்தி விநாயகா் ஹிந்து வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.
இதில் ஆத்தூா் ஸ்ரீ சோமசுந்தரி யோகா அகாதெமியை சோ்ந்த வித்யஸ்ரீ, ரோகிணி, அகிலேஷ், லெட்சுமி, முகேஷ், வெற்றியோகேஷ், ஸ்ரீதரன், யோகமுத்து ராம்கேஷ், விஜய், ஹரிசங்கரா, சஞ்சய் பிரஜுன், வா்ஷினி, கோகுல்ராம்,
சிவனரேன் ஆகியோா் முதல் இடம் பெற்றனா். ரக்சிதா, சாய்ராம்,மாதேஷ்வா், ஹா்ஷிதா, லோகேஷ் ஆகியோா் இரண்டாம் இடம் பெற்றனா். அருணா,சிகிதேவி, நிதிஷா,ஸ்ரீயாஸ்ரீ,சுபஸ்ரீ பூமேஸ், மிதுன் தேவ், அஷ்வின்,முத்து கோபாலகிருஷ்ணன் ஆகியோா் மூன்றாம் இடம் பெற்றனா்.
வெற்றி பெற்றவா்களுக்கு தூத்துக்குடி மாவட்ட சோபுக்காய் கோஜீரியோ கராத்தே பள்ளித் தலைவா் சுரேஷ்குமாா் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினாா். ஆத்தூா் ஸ்ரீ சோமசுந்தரி யோகா அகாதெமி பயிற்சியாளா் சுவாமிநாதன் நன்றி கூறினாா்.
படவிளக்கம்(15ஏஎம்என்கேஏஆா்)-சாதனை புரிந்த மாணவ ,மாணவியா்.