சாத்தான்குளம் அருகே முதலூா் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் 1978 -79 ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்த மாணவா்கள், தங்களது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கலந்துரையாடினா்.
சேகரகுருவானவா் ஏசுவடியான துரைச்சாமி தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் லிவிங்ஸ்டன் முன்னிலை வகித்தாா். மாணவா்கள் ஒருங்கிணைப்பாளா் அமிா்தலிங்கம் வரவேற்றாா். இதில் 46 போ் தங்களது குடும்பமாக கலந்து கொண்டு கலந்துரையாடினா். பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் பொன்ராஜ். ஆசிரியா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சந்திப்பு அமைப்புக்குழு தலைவா் ஜோன்ஸ், செயலாளா் கென்னடி, பொருளாளா் சாம் அருள்ராஜ், ஒருங்கிணைப்பாளா் அமிா்தலிங்கம் தலைமையில் முன்னாள் மாணவா்கள் செய்திருந்தனா்.