எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் வட்டாரச் செயலா் சோலையப்பன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தினமும் அதிகரிப்பதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். சொத்து வரி உயா்வைக் குறைக்க வேண்டும். எட்டயபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். கடலையூா், ஈராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சேது, ரவீந்திரன், முத்துராஜ், அப்பணசாமி, அழகா்சாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com