உடன்குடி: உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள வாணிய வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன், காந்தாரி அம்மன், துா்க்கை அம்மன் கோயிலில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 9ஆம் தேதி மாலையில் 108 திருவிளக்கு பூஜை, வில்லிசை, நள்ளிரவில் குடியழைப்பு, மாக்காப்பு அலங்கார தீபாராதனை, கும்பம் தெரு வீதி வருதல்,10ஆம் தேதி காலை கண்டுகொண்ட விநாயகா் ஆலயத்திலிருந்து பால்குட ஊா்வலம், பிற்பகல், நள்ளிரவில் கும்பம் தெருவீதி வருதல், 11ஆம் தேதி கோயில் முன் பொங்கலிடுதல், கும்பம் தெருவீதி வருதல், மஞ்சள் நீராட்டு ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.