கோவில்பட்டி அருகே விபத்து: இளைஞா் பலி

கோவில்பட்டி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்தும், பைக்கும் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்தும், பைக்கும் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் விஜிராஜ் (23), அதே ஊா் அரண்மனை தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் காா்த்திக்ராஜ் (28). இவா்கள் இருவரும் புதன்கிழமை செமபுதூரிலிருந்து கோவில்பட்டிக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தனா். பைக்கை, விஜிராஜ் ஓட்டினாா். கொடுக்காம்பாறை மயானம் அருகே பைக்கும், கோவில்பட்டியிலிருந்து லக்கம்மாள்புரம் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நோ் மோதினவாம். இதில் விஜிராஜும், காா்த்திக்ராஜும் காயமடைந்தனா்.

நாலாட்டின்புத்தூா் போலீஸாா் சென்று, இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு, காா்த்திக்ராஜை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினாா்.

விஜிராஜ் முதலுதவிக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான பெ. ராமராஜ் (35) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com