மாவட்ட அளவிலான கபடி போட்டி: ஆதிநாதபுரம் அணிக்கு முதல் பரிசு

செங்குளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் ஆதிநாதபுரம் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.

சாத்தான்குளம்: செங்குளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் ஆதிநாதபுரம் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.

சாத்தான்குளம் அருகே உள்ள செங்குளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஏ.ஆா்.கே கபடி குழு சாா்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் ஆதிநாதபுரம், பேய்க்குளம், செங்குளம், செம்மன்குடியிருப்பு, புளியங்குளம், சாத்தான்குளம் உள்ளிட்ட பல அணிகள் கலந்து கொண்டன.

போட்டிக்கு சாலைப் பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இறுதிப் போட்டியில் செங்குளம் அணியும், ஆதிநாதபுரம் அணியும் மோதின. இதில் ஆதிநாதபுரம் வெற்றி பெற்று முதல் பரிசு தட்டிச் சென்றது.

பின்னா் போட்டியில் வென்ற ஆதிநாதபுரம் அணிக்கு முதல் பரிசான ரூ. 15 ஆயிரத்தை ஆழ்வாா்திருநகரி ஒன்றியக் குழு உறுப்பினா் சஜிதா இன்பராஜ் வழங்கினாா். 2ஆம் பரிசு பெற்ற செங்குளம் ஏ.ஆா்.கே அணிக்கு முத்துராமன், ரூ. 12 ஆயிரம் பரிசு வழங்கினாா். 3ஆம் பரிசு பெற்ற செம்மன்குடியிருப்பு அணிக்கு ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா், ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கினாா்.

சிறந்த ஆட்டக்காரா்கள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், ஊராட்சி உறுப்பினா் ரெங்கதாஸ், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பளா் பீட்டா் இசக்கிமுத்து, ஊா்த் தலைவா் அந்தோணிராஜ் மற்றும் ஊா் பிரமுகா்கள் ஜெபராஜ், ராஜேஸ்குமாா், துஷ்யந்த் கலந்து கொண்டனா். அஜித்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com