தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மே மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (மே 14) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மே மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (மே 14) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தங்கள், உறுப்பினா் சோ்த்தல் - நீக்குதல், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்யப்படும்.
மேலும், மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்ற வேண்டியது இருந்தால் முகாமிலேயே பதிவேற்றப்படும். பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைகளைத் தெரிவித்து மக்கள் பயன்பெறலாம் என்றாா் அவா்.