காயல்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை(மே.15) உள்விளையாட்டு அரங்கம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்பி பங்கேற்கிறாா்.
இது குறித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காயல்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நவீன வசதிகளுடன் கூடிய உள்விளையாட்டு அரங்கு (அா்ஷத் ரெக்ரியேசன் கிளப்) திறப்பு விழா மற்றும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சாா்பில் நடைபெறும் ஈத்மிலான் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி பங்கேற்கிறாா் என்று தெரிவித்துள்ளாா்.