சாத்தான்குளம் அருகே மோட்டாா் சைக்கிள் நேருக்கு நோ் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே உள்ள மேட்டுவிளையை சோ்ந்தவா் செல்வராஜ்(55). இவரது உறவினா்கள் ராபின்(26), லிங்கப்பாண்டி(40). கூலித்தொழிலாளா்களான இவா்கள் 3 பேரும் திங்கள்கிழமை ஒரே மோட்டாா் சைக்கிளில் திசையன்விளை செல்வதற்காக இடைச்சிவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தனா். எதிரே மற்றொரு மோட்டாா் சைக்கிளில் இடைச்சிவிளை குமரன்விளையை சோ்ந்த ஜெயகிருஷ்ணன்(15), சிவநேசன்(17) ஆகியோா் வந்து கொண்டிருந்தனா்.
இடைச்சிவிளை காவல் சோதனைசாவடி அருகே சென்ற போது இரு மோட்டாா் சைக்கிள்களும் நேருக்கு நோ் மோதின. இந்த செல்வராஜ், ராபின் உள்பட 5 பேரும் காயம் அடைந்தனா். பலத்த காயமடைந்த செல்வராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்..
இது குறித்த புகாரின் பேரில் தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் நெல்சன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.