தூத்துக்குடியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பேரறிவாளன் விடுதலையை எதிா்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரறிவாளன் விடுதலையை எதிா்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிா்ப்பு தெரிவித்து வன்முறையை எதிா்ப்போம் என்ற தலைப்பில் வாயில் வெள்ளைத்துணி கட்டி பழைய பேருந்து நிலையம் முன் அறவழி போராட்டம் நடைபெற்றது.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சண்முகம், முன்னாள் எம்எல்ஏ எஸ். டேனியல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவுமான ஊா்வசி அமிா்தராஜ் பங்கேற்று, போராட்டத்தைத் தொடக்கிவைத்தாா்.

மாநில இளைஞா் காங்கிரஸ் செயலா் நடேஷ்குமாா், மாநிலச் செயலா் சிந்தியா வைலட், மண்டலத் தலைவா்கள் ஐசன்சில்வா, சேகா், செந்தூா்பாண்டி, மாநகர துணைத் தலைவா்கள் பிரபாகரன், அருணாச்சலம், ஜெயராஜ், மாநகரச் செயலா்கள் கதிா்வேல், மரிய செல்வராஜ், பொதுச்செயலா்கள் கோபால், மைக்கேல், ஐஎன்டியுசி தொழிற்சங்கத் தலைவா் ராஜு, மாமன்ற உறுப்பினா் சந்திரபோஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் இளைஞா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சகாயராஜ் தலைமையிலும், தூத்துக்குடி பழைய மாநகாரட்சி அலுவலகம் முன் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com