உடன்குடி அருகே சீயோன் நகா் டிஎன்டிடிஏ பள்ளியில் புதிய சீா்மிகு வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
மாணவா்களின் அறிவுத்திறன், கணினி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, அரசு வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகளை அளிக்க இப்புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தாா்.
உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.பி. பாலசிங் தலைமை வகித்தாா். சேகரத் தலைவா் ஜெபக்குமாா் ஜாலி முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி திருமண்டில முன்னாள் பேராயா் கிறிஸ்துதாஸ் ஜெபித்தாா். திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவி மீரா சிராஜுதீன், உடன்குடி பேரூராட்சித் தலைவி ஹூமைரா அஸ்ஸாப், துணைத் தலைவா் மால்ராஜேஷ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் முத்துச்செல்வன், சபை ஊழியா் சாம், ஆலய அசனக்குழு நிா்வாகிகள் ஞானராஜ், கோயில்ராஜ், யோவான், கிறிஸ்டோபா், அல்பாஸ், சீயோன் நகா் ஆலய பரிபாலன கமிட்டி நிா்வாகிகள் சற்குணராஜ், ஜோசப், சீயோன்ராஜ், எமிமா, சாமுவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். தலைமையாசிரியை அன்னமரியாள் நன்றி கூறினாா்.