தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இம்மாதம் 24ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. மே மாதத்துக்கான கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 24) காலை 10 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் நடைபெறுகிறது.
இதில், விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.