விளாத்திகுளம் அருகேவீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

விளாத்திகுளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 10 சவரன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விளாத்திகுளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 10 சவரன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விளாத்திகுளம் அருகேயுள்ள புதூா் சிவலாா்பட்டியைச் சோ்ந்த கடற்கரை மகன் கந்தவேல் (39). இவா் கடந்த 24ஆம் தேதி இரவு வீட்டைப் பூட்டிவிட்டு, மாடியில் குடும்பத்துடன் தூங்கியுள்ளாா். மறுநாள் பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்துகிடந்ததாம். பீரோவிலிருந்த 10 சவரன் தங்க நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்ததாம். புகாரின் பேரில் புதூா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com