திருச்செந்தூரில் தீத்தடுப்பு விழிப்புணா்வு

திருச்செந்தூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்செந்தூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்செந்தூா் அருகேயுள்ள ராணிமகாராஜபுரத்தில் தனியாா் அப்பள தயாரிப்பு நிறுவனத்தில் வைத்து தீத்தடுப்பு மற்றும் உயிா் மீட்பு பற்றி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் திருச்செந்தூா் நிலைய அலுவலா் ராஜமூா்த்தி பணியாளா்களுக்கு தீவிபத்து மற்றும் பேரிடா் காலங்களில் எவ்வாறு செயல்படுவது குறித்து விளக்கவுரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் நிலைய அலுவலா் (போக்குவரத்து) மோகன் தலைமையில் ராதாகிருஷ்ணன் பாலகிருஷ்ணன், ரமேஷ், சேகா், விமல் இமானுவேல் ஆபிரகாம், முத்து மணிகண்டன், அகஸ்டின் உள்ளிட்ட வீரா்கள் செயல்முறை பயிற்சி செய்து காண்பித்தனா். மேலாளா் மோகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com