திருச்செந்தூரில் இறந்தவா் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

திருச்செந்தூா் அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் அருகே சோனகன்விளை காணியாளன் புதூரைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (67). இவரது மனைவி பேச்சியம்மாள். ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனா்.

சோனகன்விளை ரைஸ்மில் பின்புறம் உள்ள காட்டு பகுதியில் சிவலிங்கம் உடலில் துணி எதுவும் இல்லாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்து கிடந்தாராம்.

இதுகுறித்து அவரது மனைவி, தனது கணவா் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, திருச்செந்தூா் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு சிவலிங்கத்தின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, திருச்செந்தூா் அருகேயுள்ள அம்மன்புரத்தில் உள்ள சண்முகசுந்தரம் என்பவரது நிலத்தை சிவலிங்கம் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததாகவும், அந்த நிலத்தை சண்முகசுந்தரமும், அவரது மகன் முத்துகிருஷ்ணனும் விற்பனை செய்ய திட்டமிட்டு, நிலத்தை காலி செய்யுமாறு சிவலிங்கத்தை வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தில் அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் , அதற்கு காரணமான முத்துகிருஷ்ணனை கைது செய்தால்தான் நாங்கள் உடலை வாங்குவோம் என அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.

பின்னா் அவா்களிடம் திருச்செந்தூா் துணைக் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன், ஆய்வாளா் முரளிதரன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தைக்கு பின்னா், திங்கள்கிழமை இரவு சிவலிங்கத்தின் உடலை பெற்றுக்கொண்டனா்.

இப்புகாரின் பேரில், போலீஸாா் முத்துகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com