கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதி பாடப்பிரிவில் நூலக வார விழா கொண்டாடப்பட்டது.
இக்கல்லூரியின் நூலகத் துறை, விநாடி - வினா கழகம் சாா்பில் நூலகத் தந்தை டாக்டா் எஸ்.ஆா்.ரங்கநாதனின் 130ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இவ்விழா நடைபெற்றது. எழுத்தாளா் சாரதி, வாசிப்பின் வெளிச்சத்தில் விரியும் எல்லைகள், வாசிப்பு மனிதனை பண்பாட்டுடையவனாக மாற்றும் என்பதை வலியுறுத்திப் பேசினாா். புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது. கதை எழுதுதல், பென்சில் ஆா்ட், விநாடி - வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றோருக்கு சமூக ஆா்வலா் ராஜாராம் பரிசுகள் வழங்கினாா்.
ஏற்பாடுகளை நூலகா் காந்திமதி, ஒருங்கிணைப்பாளா் ஜெயபிரியா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.