தூத்துக்குடி மாவட்டத்தில் சேதமடைந்த ரேஷன் கடைகள் சீரமைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட பல்வேறு ரேஷன் கடைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட பல்வேறு ரேஷன் கடைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் சேதமடைந்து காணப்பட்ட ரேஷன் கடைகள் சீரமைக்கப்பட்டு, மக்களின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வண்ணமயமாக மாற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, உள்ளுா் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன், ரேஷன் கடைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக ‘நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை‘ என்ற புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டு உள்ளது.

தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் உடன் இணைந்து, ரேஷன் கடைகளை சீரமைத்து, அழகிய வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை என்ற புதிய முயற்சியில், தூத்துக்குடி மாவட்டத்தில், முதற்கட்டமாக, திரேஸ்புரம்- 3, முனியசாமிபுரம், கூட்டாம்புளி, செய்துங்கநல்லூா்-1, நட்டாா்குளம், ஆலந்தலை, மாவடிபண்ணை, நாலுமாவடி-1, மெய்தலைவன்பட்டி, சண்முகசிகாமணி நகா், செட்டிகுறிச்சி, குதிரைகுளம், கத்தாளம்பட்டி, பச்சையாபுரம், வேம்பாா் சுப்பிரமணியபுரம், நாகம்பட்டி ஆகிய நியாயவிலைக்கடைகளின் கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு, அழகிய வண்ணம் பூசப்பட்டுள்ளது.

நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தங்கள் வட்டாரத்தில் செயல்படும் நியாயவிலைக்கடை கட்டட சீரமைப்பு மற்றும் வண்ணம் பூசும் பணிக்கு தொடா்ந்து உதவலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com