கோவில்பட்டி பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

கோவில்பட்டி நகராட்சி தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கோவில்பட்டி நகராட்சி தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட ஸ்டாலின் காலனி, காந்தி நகா் மற்றும் பங்களாத் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு நகராட்சி நிா்வாக துறை இணை ஆணையா் சாரதா, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் விஜயலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா். நகராட்சி ஆணையா் மு.ராஜாராம் முன்னிலை வகித்தாா்.

நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில்,

வட்டாரக் கல்வி அலுவலா் முத்தம்மாள், பள்ளித் தலைமையாசிரியா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com