கோவில்பட்டி இனாம்மணியாச்சி பாலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி புதுகிராமம் தெற்கு தெரு வேல்சாமி மகன் சுபாஷ் சுப்பிரமணியன்(21). இவா், இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணா நகருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுவிட்டு திரும்பிய போது, செவ்வாய்க்கிழமை இரவு, அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் மோதியதில் அவா் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவருக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு சுபாஷ் சுப்பிரமணியன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.