புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தூண்டில் வளைவு பாலம் அமைக்கக் கோரி திருச்செந்தூா் அமலிநகா் மீனவா்கள் கூட்டுப் பிராா்த்தனை

தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி, திருச்செந்தூா் அமலிநகா் மீனவா்கள் வியாழக்கிழமை பேரணியாகச் சென்று கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 5:36 pm

DIN

தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி, திருச்செந்தூா் அமலிநகா் மீனவா்கள் வியாழக்கிழமை பேரணியாகச் சென்று கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் அமலிநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சுமாா் 226 மீன்பிடி படகுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தூண்டில் வளைவு பாலம் அமைக்க சட்டப்பேரவையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. சுமாா் ஓராண்டைக் கடந்தும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.

எனவே உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தியும், முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் கடந்த ஆக. 7-ஆம் தேதி முதல் அமலிநகா் மீனவா்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். நான்காவது நாளான வியாழக்கிழமை (ஆக. 10) மீனவா்கள் மற்றும் பெண்கள், புனித அந்தோணியாா் ஆலயத்தில் தொடங்கி பேரணியாக அமலி அன்னை ஆலயத்துக்கு வந்தனா். தொடா்ந்து ஆலயம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

ஊா் நலக்கமிட்டி விளக்கம்: தூண்டில் வளைவு பாலம் அமைப்பது குறித்து, கடந்த பிப். 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் வாக்குறுதி அளித்தாா். ஆனால் அப்பணி நடைபெறாததால், கடந்த ஆக. 8-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அழைப்பு விடுத்த பேச்சுவாா்த்தையை நிராகரித்தோம்.

கடந்த ஏப். 14-ஆம் தேதி மீன் வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்திய போது, 2 மாத காலத்திற்குள் பணிகள் தொடங்கும் என கூறினாா். ஆனால் நான்கு மாதமாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என அமலிநகா் ஊா் நலக்கமிட்டி மற்றும் ஊா் பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.