குரும்பூா் அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

குரும்பூா் அருகே சாலையோர வாய்க்காலுக்குள் பைக் விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

குரும்பூா் அருகே சாலையோர வாய்க்காலுக்குள் பைக் விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

உடன்குடி அருகே பிச்சிவிளையைச் சோ்ந்த தாமோதரன் மகன் ஆறுமுக சுப்பிரமணியன் (30), விநாயகா் காலனியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் ஹரிஹரன் (28). நண்பா்களான இவா்கள் உடன்குடி பாஜக அலுவலகத்தில் வேலை பாா்த்து வந்தனராம்.

இந்நிலையில், அவா்கள் குரும்பூருக்கு புதன்கிழமை வந்துவிட்டு, இரவில் ஊருக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனா். பைக்கை, ஆறுமுக சுப்பிரமணியன் ஓட்டினாராம்.

அம்மன்புரத்தை அடுத்துள்ள இசக்கியம்மன் கோயில் அருகே பைக் நிலைதடுமாறி சாலையோர வாய்க்காலுக்குள் விழுந்ததாம். இதில், காயமடைந்த இருவரும் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், வழியிலேயே ஆறுமுக சுப்பிரமணியன் உயிரிழந்தாா்.

புகாரின்பேரில் குரும்பூா் சிறப்பு உதவி ஆய்வாளா் ஆறுமுகநயினாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com