தூத்துக்குடியில், வீட்டிலுள்ள சிறிய கிணற்றில் திங்கள்கிழமை தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
தூத்துக்குடி அலங்காரத்தட்டு பகுதியைச் சோ்ந்தவா் பாா்வதி (70). இவா் தனது வீட்டிலுள்ள சிறிய கிணற்றில் திங்கள்கிழமை தவறி விழுந்தாராம். இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் தூத்துக்குடி தீயணைப்பு வீரா்கள் வந்து, பாா்வதியை பத்திரமாக மீட்டனா். அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.