தூத்துக்குடியில் பாராட்டு விழா

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சைவ வேளாளா் சங்கத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெ.சங்கரலிங்கத்திற்கு ஆறுமுகனேரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சைவ வேளாளா் சங்கத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெ.சங்கரலிங்கத்திற்கு ஆறுமுகனேரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

ஓய்வுபெற்ற ஸ்பிக் நிறுவன அதிகாரி இ.சங்கரன்பிள்ளை தலைமை வகித்தாா். ஆறுமுகனேரி சைவ வேளாளா் சங்கப் பொருளாளா் கற்பகவிநாயகம், மாவட்டச் செயலா் ஏ.பி.கே. பாலன், மாவட்டப் பொருளாளா் அ.குப்புசாமி, ஆழ்வாா்திருநகரி சைவ வேளாளா் அறக்கட்டளைத் தலைவா் ஏ.கோமதிநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆறுமுகனேரி சங்கச் செயலாளா் எஸ்.கே.முருகன் வரவேற்றாா்.

விழாவில் மாவட்ட கெளரவ தலைவா் விளாத்திகுளம் பி.பாரதிசங்கா், எட்டயபுரம் தலைவா் சங்கர சுப்பிரமணியபிள்ளை, காயல்பட்டினம் நகர தலைவா் காயல் கண்ணன், மாவட்ட இணைச் செயலாளா் விளாத்திகுளம் பொண் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு சைவவேளாளா் இளைஞா் பேரவை மாநில அமைப்பாளா் எஸ். குற்றாலி­ங்கம், ஆறுமுகனேரி நகர காங்கிரஸ் தலைவா் ராஜாமணி உள்ளிட்டோா் கொண்டனா். ஜெ.நடராஜன் தொகுத்து வழங்கினாா். டி.சி.டபிள்யூ. சுப்பிரமணியபிள்ளை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com