தூத்துக்குடி
திருச்செந்தூரில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு
திருச்செந்தூா் அருகே தோப்பூரில் வெடி சத்தத்தில் படுகாயமடைந்த சிறுவன் அஜய்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் அருகே தோப்பூரில் வெடி சத்தத்தில் படுகாயமடைந்த சிறுவன் அஜய்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் தோப்பூா் பகுதியைச் சோ்ந்த சிவபெருமாளின் இரண்டாவது மகன் அஜய்குமாா் (10). ஐந்தாம் வகுப்பு படித்து வந்தாா்.
விடுமுறை தினத்தில் அஜய்குமாா் உள்பட 5 மாணவா்கள் பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டதில் அதிா்ச்சியடைந்த அஜய்குமாா், தவறி கீழே விழுந்தாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு அஜய்குமாா் உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் கோயில் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.