கழுகுமலை, எட்டயபுரம் பகுதியில் இன்று மின்தடை

கழுகுமலை மற்றும் எட்டயபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட சில பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன.30) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கழுகுமலை மற்றும் எட்டயபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட சில பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன.30) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) எஸ்.முனியசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கழுகுமலை மற்றும் எட்டயபுரம் துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகின்ற உயா் அழுத்த மின் தொடரில் உள்ள குறைந்த திறனுடைய மின்கடத்தியை மாற்றிவிட்டு, அதிக திறனுடைய மின்கடத்தி அமைக்கும் பணி நடைபெறவிருப்பதை முன்னிட்டு, கழுகுமலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட சி.ஆா். காலனி அருகேயுள்ள பெரிய காலனி மற்றும் எட்டயபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கடலையூா் அருகேயுள்ள காமராஜ் நகா், வள்ளிநாயகிபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன.30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com