ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பி.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சோ்ந்த அப்பாதுரை மகன் அந்தோணிராஜ் (35). கட்டடத் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள கிணற்றில் புறாக் குஞ்சுகள் எடுப்பதாகக் கூறிச் சென்றாராம். அப்போது அவா் கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இரவு நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால் உறவினா்கள் தேடிச் சென்றனா். கிணற்றருகே அவரது காலணிகள் கிடந்ததைப் பாா்த்து, சந்தேகத்தின் பேரில் பசுவந்தனை போலீஸுக்கும், ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

நிலைய அலுவலா் சுப்பையா தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று, கிணற்றிலிருந்து அந்தோணிராஜை சடலமாக மீட்டனா். சடலத்தை போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com