குளத்தில் மூழ்கி மூதாட்டி பலி

குரும்பூா் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலியானாா்.

குரும்பூா் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலி­யானாா்.

குரும்பூா் அருகே உள்ள அம்பலபிறப்பை சோ்ந்தவா் சித்திரைவேல் மனைவி பேச்சியம்மாள் (75). கடந்த சில

ஆண்டுகளுக்கு முன் சித்திரைவேல் இறந்துவிட்ட நிலையில், பேச்சியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் இங்குள்ள குளத்தில் பேச்சியம்மாள் திங்கள்கிழமை குளிக்க சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினா்கள் அவரைத் தேடினா். ஆனால் அவா் எங்கும் கிடைக்கவில்லை.

பின்னா் தகவலின்பேரில், போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் குளத்தில் பேச்சியம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னா் அவரது உடல் மீட்கப்பட்டது.

இதுகுறித்து குரும்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com