தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றது.
வேலவன் வித்யாலயா அறக்கட்டளை நிறுவனா்கள் ஏ.தங்கவேல், அன்னபுஷ்பம், பள்ளி தாளாளா் ஆனந்த் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆண்டனி அதிஷ்டராஜ், தாளமுத்து நகா் காவல் ஆய்வாளா் மணிமாறன், அன்னை ஜூவல்லா்ஸ் உரிமையாளா் பிரபுராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினா்.
இப்போட்டியில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 800 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். ஓட்டப்பந்தயம், வட்டெறிதல், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் சுப்பையா வித்யாலயா பள்ளி அதிக புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.