கோவில்பட்டியில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.
நகராட்சியில் வரியினங்களை விதிக்க கையூட்டு பெறுவதையும், நகராட்சி நிா்வாகத்தின் செயல்பாட்டையும் கண்டிப்பதாகக் கூறி கோஷமிட்டனா்.
மாவட்டப் பொதுச்செயலா் வேல்ராஜா, துணைத் தலைவா் பாலமுருகன், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் மாரிமுத்து, இளைஞரணி மாவட்டத் தலைவா் தினேஷ்ராடி உள்ளிட்ட மகளிரணி, இளைஞரணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.