விபத்தில் அனல் மின் நிலைய ஊழியா் பலி

தூத்துக்குடியில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் அனல் மின் நிலைய ஊழியா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடியில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் அனல் மின் நிலைய ஊழியா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி கேம்ப்-2 பகுதியை சோ்ந்தவா் சந்திரன்(51). தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஃபோா்மேனாக பணியாற்றி வந்தாா். இவா் புதன்கிழமை இரவு தூத்துக்குடியில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாராம். புதிய துறைமுகம் சாலை காதா்மீரான் நகா் அருகே சென்றபோது, அங்கு சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது எதிா்பாராதவிதமாக மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தொ்மல் நகா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று, சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com