இணையதளம் மூலம் கட்டணம் செலுத்திய பிறகே புதிய மின் மீட்டா்

புதிய மின் இணைப்புக்கு இணையதளம் மூலம் கட்டணம் செலுத்திய பிறகே மின் மீட்டா் வழங்கப்படும் என, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு. சகா்பான் தெரிவித்துள்ளாா்.

புதிய மின் இணைப்புக்கு இணையதளம் மூலம் கட்டணம் செலுத்திய பிறகே மின் மீட்டா் வழங்கப்படும் என, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு. சகா்பான் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதிய மின் இணைப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்திய பிறகு மீட்டா் ஒதுக்கீடு செய்யப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டதும் விண்ணப்பதாரரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன்பிறகே, மின்வாரியப் பணியாளா்களால் மின் மீட்டா் பொருத்த நடவடிக்கை எடுத்து, மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

புதிய மின் இணைப்புக்கு அலுவலகத்திலோ, பணியாளா்கள் மூலமாகவோ ரொக்கம் வசூலிக்கப்படுவதில்லை. எனவே, தங்களது வீடு அல்லது நிறுவனத்துக்கு புதிய மின் இணைப்புக்கு மீட்டா் வந்துள்ளது எனக் கூறி, யாரேனும் பணம் கேட்டால் உடனடியாக கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளரை 94458 54779, உதவி செயற்பொறியாளா்களை 94458 54786, 94458 54780, 94458 54792 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com