பைக் மீது காா் மோதிய விபத்தில்நிதி நிறுவன உரிமையாளா் பலி

தூத்துக்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் நிதி நிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் நிதி நிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரேமானந்த் (45). இவா் ஆழ்வாா்திருநகரி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் ஆழ்வாா்திருநகரியில் இருந்து முத்தையாபுரம் சென்று கொண்டிருந்தாராம். பொட்டல்காடு விலக்கு அருகே சென்றபோது,

அவ்வழியாக வந்த காா், மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த பிரேமானந்தை மீட்ட அப்பகுதியினா் அவசர ஊா்தியில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால் அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com