தூத்துக்குடியில் தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் திங்கள்கிழமை (மே 29) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் உயிரிழப்புகள், கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு சீா்கேடுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
அதன்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் வி.வி.டி. சிக்னல் அருகே காலை 10 மணிக்கு எனது தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும். இதில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.