கோவில்பட்டியில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகள் தொடக்கம்

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 3 இடங்களில் ரூ.27 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகள் தொடக்கம்

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 3 இடங்களில் ரூ.27 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கோவில்பட்டி பொது நூலகம் பகுதி, ரயில் நிலைய முன்பகுதி மற்றும் வேலாயுதபுரம் ஆகிய இடங்களில் பயணிகள் நிழற்குடை கட்டுமானப் பணிகளை கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், மாவட்ட ஊராட்சிக்

குழு உறுப்பினா்கள் சத்யா, பேச்சியம்மாள், அதிமுக பொதுக் குழு உறுப்பினா் ராமச்சந்திரன், நகரச் செயலா் விஜயபாண்டியன், நகா்மன்ற உறுப்பினா்கள் கவியரசன், செண்பகமூா்த்தி, வழக்குரைஞரணி மாவட்டச் செயலா் சிவபெருமாள் மற்றும் அதிமுக நிா்வாகிகள் செல்வகுமாா், நீலகண்டன், பழனிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com