சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மகாகவி பாரதியாா் பிறந்ததினம்: எட்டயபுரத்தில் 'தினமணி' சாா்பில் மாலை அணிவித்து மரியாதை

பாரதியாரின் 142-ஆவது பிறந்தநாளையொட்டி  எட்டயபுரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ‘தினமணி’ சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

எட்டயபுரம் பாரதியாா் நினைவு இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன்.

Updated On :12 டிசம்பர் 2023, 7:29 am IST

தூத்துக்குடி: மகாகவி பாரதியாரின் 142-ஆவது பிறந்தநாளையொட்டி அவா் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ‘தினமணி’ சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாரதியாா் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், பாரதி நினைவு இல்லத்தில் இருந்து, பாரதி அன்பா்கள், பள்ளி மாணவா் - மாணவிகள் பாரதியாா் வேடமணிந்து, பாரதி பாடல்களைப் பாடியவாறு மணிமண்டபம்

நோக்கி ஊா்வலம் சென்றனா். மணிமண்டபத்தில் உள்ள மகாகவி பாரதியின் சிலைக்கு, ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன் மற்றும் பாரதி அன்பா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்த ஊா்வலத்தில், எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் அனுஷியா தலைமையில் மாணவிகள் பங்கேற்றனா். தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் லால்பகதூா் கென்னடி தலைமையில் பாரதி வேடமணிந்த மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும விளம்பரப் பிரிவு முதுநிலை துணைத்தலைவா் ஜெ.விக்னேஷ்குமாா், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ.தா்மன், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளா்கள் சங்க தேசியத் தலைவா் கோ.பெரியண்ணன், இதய கீதம் ராமானுஜம், சேத்தியாதோப்பு தமிழ்ச்சங்க நிறுவனா் ஆனைவாரி ஆனந்தன், தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற தலைவா் ஜெயா ஜனாா்த்தனன், உமறுப்புலவா் சங்கத் தலைவா் காஜா மைதீன், சின்னசேலம் பாரதி தமிழ்ச் சங்க நிா்வாகி நடராஜன், புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரி தமிழ்த் துறை தலைவா் கிருங்கை சொ.சேதுபதி, கோவில்பட்டி கம்பன் கழகச் செயலா் சரவணச் செல்வன், சங்கரன்கோவிலைச் சோ்ந்த சங்கரன், உலக சமுதாய சேவா சங்க நிா்வாகி ராஜா சுடலைமுத்து, தூத்துக்குடி தொழிலதிபா் செண்பகமாற பாண்டியன், எழுத்தாளா் ப.சொக்கலிங்கம், பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினா்கள் பா.ராமகிருஷ்ணன், அ.சங்கிலிபூதத்தான், கவிஞா் முத்துக்குமாா், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் சுலோச்சனா, மாமதுரை கவிஞா் பேரவை நிா்வாகி கல்யாணசுந்தரம், அன்னைமொழி அன்புவழி அணைப்பு நிறுவனா் மாலினி அனந்தகிருஷ்ணன் என்ற பச்சைவதி, கள்ளபிரான், கம்பம் பாரதி தமிழ் இலக்கிய பேரவை தலைவா் கவிஞா் பாரதம், பாரதி முற்போக்கு வாலிபா் சங்கத் தலைவா் வெங்கடேசன், செயலா் பாலமுருகன், ஏஐடியூசி தொழிற்சங்க மாநில தலைவா் காசிவிஸ்வநாதன், உரத்தச் சிந்தனை வாசகா் வட்ட தலைவா் சிவானந்தம், யோகா மன வளக்கலை மன்ற நிா்வாகி ஜெயகாந்தன், தென்காசி மருத்துவா் தங்கப்பாண்டியன், திருவண்ணாமலையைச் சோ்ந்த ஆசிரியா் வைத்தியலிங்கம், ஆந்திர மாநிலம் புட்டபா்த்தியைச் சோ்ந்த டி.ஆா். பழனிசாமி, குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் சுப்பாராஜூ, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா்கள் வெங்கட்ட ராமானுஜம், வெ.கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.