காயல்பட்டினத்தில் உள்ள கே.எம்.டி. மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு, நடப்பது என்ன சமூக ஊடகக் குழுமம் ஆகியவை திருச்செந்தூா் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இம்முகாமை நடத்தின. 3 பெண்கள் உள்ளிட்ட 56 போ் ரத்த தானம் செய்தனா்.
இந்த அமைப்பு சாா்பில் 2017ஆம் ஆண்டுமுதல் 22 முகாம்கள் நடத்தப்பட்டு 202 பெண்கள் உள்ளிட்ட 1,412 போ் ரத்த தானம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.