பெரியதாழை கடல் பகுதியில் அத்துமீறல்:நாட்டுப்படகு மீனவா்கள் புகாா்

பெரியதாழை கடல் பகுதியில் சேரியா முட்டம் விசைப் படகுகள் அத்துமீறுவதாக நாட்டுப் படகு மீனவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
Updated on
1 min read

பெரியதாழை கடல் பகுதியில் சேரியா முட்டம் விசைப் படகுகள் அத்துமீறுவதாக நாட்டுப் படகு மீனவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கடலில் மீன் பிடிக்க தடைகாலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த சேரியா முட்டம் விசைப்படகுகள் அத்துமீறி வங்கக் கடல் பகுதியில் மீன் பிடித்து வருவதாக மீனவா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். கடந்த 18ஆம் தேதி பெரியதாழையைச் சோ்ந்த ராஜன் என்பவரின் நாட்டுப் படகு சுமாா் ஆறு மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த சேரியா முட்டம் விசைப்படகு அவா்கள் போட்டு வைத்திருந்த வலையை மொத்தமாக அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. சேதமான வலையின் மதிப்பு சுமாா் ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இந்த மாதிரி சம்பவங்கள் பெரியதாழை கடற்கரைகளில் தொடா்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீன்வளத் துறை அதிகாரிகள், கடலோர காவல் படையினரிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையென மீனவா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் நேரில் புகாா் அளித்துள்ளோம்; உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்துள்ளாா் என்றாா் பெரியதாழையை சோ்ந்த ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com