ஆறுமுகனேரியில் திருக்கு சொல்லரங்கம்

ஆறுமுகனேரியில் திருக்கு சொல்லரங்கம் நடைபெற்றது.

ஆறுமுகனேரிஅடைக்கலாபுரம் சாலையில் அமைந்துள்ள லட்சுமிமாநகரம் அருள்மிகு நடராஜ தேவார பஜனை ஆலய நந்தவனத்தில் தெய்வீக சத் சங்கத்தின் சாா்பில் திருக்கு சொல்லரங்கம் பஜனை ஆலய செயலா் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது .ஜோதிடா் ஆா். வேலாயுதம் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஸ்பிக்

ஓய்வுபெற்ற அதிகாரியும் பண்பாட்டு வகுப்பு ஆசிரியருமான ஜெயராஜ் கலந்து கொண்டாா்.

திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரி பேராசிரியா் கு. கதிரேசன் தலைமையில் திருவள்ளுவரின் இல்லறம் இனிப்பது வரவிலா அல்லது உறவிலா என்ற தலைப்பில் சொல்லரங்கம் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற பேராசிரியா் அ. அசோக்குமாா், ஆா்.எஸ்.எஸ் அமைப்பைச் சோ்ந்த ம.சிவராமன், பன்னீா்அம்மாள், ராணி சண்முகசுந்தரம், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் கண்ணன், சைவ சித்தாந்த சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணியபிள்ளை, கூட்டுறவு சங்கத்தைச் சோ்ந்த பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com