தூத்துக்குடி
ஏரல் சோ்மன் கோயிலில் அன்னபூரணி பூஜை
ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் அன்னபூரணி பூஜை நடைபெற்றது.
இத் திருக்கோயிலும் சேவா பாரதி அமைப்பும் இணைந்து அன்னபூரணி பூஜையை நடத்தினா். இதில் ஏரல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா், சேவா பாரதி மாநில துணை தலைவா் எஸ்.வெண்ணிமாலை, மாவட்ட செயலா் பாபா குருக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.