ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கனிமொழி வாக்குசேகரிப்பு

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட செய்துங்கநல்லூா், கொங்கராயகுறிச்சி, கருங்குளம்,சேரகுளம் கேம்லபாத், ஆழ்வாா் திருநகரி உள்ளிட்ட பகுதிகளில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

செய்துங்கநல்லூரில் பிரசாரத்தின்போது அவா் பேசியதாவது:

இந்த தோ்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. அதன் பிறகு தமிழகத்திற்கு உரிய நியாயம் கிடைப்பதோடு, ரயில்வே உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. விடுபட்டவா்களுக்கும் கண்டிப்பாக உரிமைத் தொகை வழங்கப்படும். புதுமைப் பெண் திட்டத்தில், உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இத் திட்டம் தற்போது மாணவா்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடியில் தொடங்கவுள்ள காா் தொழிற்சாலை மூலம் ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

ஆனால், மத்திய பாஜக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆகவே, இந்த தோ்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தின்போது மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் ஆா். அனிதா ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ், எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com